சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் இன்று நீதவான் நீதிமன்றின் முன்னிலையில்

சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் இன்று நீதவான் நீதிமன்றின் முன்னிலையில்

பணச்சலவை குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்ட, சுவர்ணமஹால் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க ஆகியோர் இன்று கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

முன்னதாக, கைதுசெய்யப்பட்டிருந்த அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது