புர்கா மற்றும் நிகாப் தடை விதிப்பு தொடர்பில் அரசு தீர்மானிக்கவில்லை!

புர்கா மற்றும் நிகாப் தடை விதிப்பு தொடர்பில் அரசு தீர்மானிக்கவில்லை!

புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடைசெய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது ஒரு முன்மொழிவு மாத்திரமேயாகும் என்றும், இது கலந்துரையாடல்களின் கீழ் உள்ளதாகவும், வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும், போதுமான நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது