நாட்டில் நேற்று 5 கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் 5 கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின.
இதன்படி கொவிட்-19 நோயினால் நாட்டில் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 13 ஆம் திகதி மரணமானர்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா, குருதி விஷமானமை அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்தார்.
கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான அவர், தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
பல உடற்பாகங்கள் செயலிழந்தமை, கொவிட்-19 நியூமோனியா மற்றும் அதிகரித்த நீரிழிவு நோய் நிலைமையே அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
அதிகரித்த சிறுநீரக செயலிழப்பு மற்றும் ஆஸ்துமா நோய் நிலைமையே அவரிகள் மரணத்திற்கான காரணமாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 10 ஆம் திகதி தனது வீட்டில் மரணித்தார்.
கொவிட் தொற்று, உயர் குருதி அழுத்தம், அதிகரித்த நீரிழிவு நோய் நிலைமையே அவரின் உயிரிழப்புக்கான காணரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மொரட்டுவை ஆதார வைத்தியசாலையில், கொவிட் தொற்றுறுதியான அவர், பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்தார்.
குருதி விஷமானமை, கொவிட் நிலைமை மற்றும் அதிகரித்த நீரிழிவு நோய் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது