படையினருடன் யாழ். சென்ற பேருந்து விபத்து! சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை
மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படையினரை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற சிறுவர்கள் மீது மோதியுள்ளது.
களுத்துறை பிரதேச செயலகத்தின் முன்னால் நடந்து சென்ற இரு சிறுவர்கள் மீதே இவ்வாறு பேருந்து மோதியுள்ளது.
இதில் சிப்பாய் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவன் ஒருவரும் சிறுமி ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026