நாவலப்பிட்டியில் 17 வயது இளைஞர் நீரில் மூழ்கி பலி!

நாவலப்பிட்டியில் 17 வயது இளைஞர் நீரில் மூழ்கி பலி!

நாவலப்பிட்டி – மல்லந்த பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த 17 வயதான இளைஞர் ஒருவர் குறித்த ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து இன்று(15) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெலிசர கடற்படை சுழியோடிகள் மற்றும் நாவலப்பிட்டி காவல்நிலைய அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளையடுத்தே காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி- தெல்தெனியவைச் சேர்ந்த, இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவரொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாணவன் தமது நண்பர்களுடன் மகாவலி கங்கையில் நேற்று(14) நீராடிக்கொண்டிருந்தபோது நேற்று காணாமல்போயிருந்தார்