புதிய உரு திரிபடைந்த கொரோனா வைரசால் அச்சுறுத்தல் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

புதிய உரு திரிபடைந்த கொரோனா வைரசால் அச்சுறுத்தல் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

உலகளவில் 14 நாடுகளில் 3 வகை புதிய உரு திரிபடைந்த கொரோனா வைரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது குறித்த 14 நாடுகளில் கண்டறியப்பட்ட குறித்த உரு திரிபடைந்த வைரஸ் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டவை இரு வகை கொரோனா வைரஸ் என்றும், மூன்றாவது வகை வைரஸ், பிரேசிலின் அமேசனோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவலடைந்த கொரோனா வைரசை விட உரு திரிபடைந்த வைரஸால் அதிக உயிர் ஆபத்துகள் ஏற்படுத்துவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.