நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு...!

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு...!

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்று மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேநேரம், தற்போதைய நாட்களில் மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடனான வானிலை நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.