யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை: யுவன்ஷங்கர் ராஜா அறிவிப்பு

யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை: யுவன்ஷங்கர் ராஜா அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு அதில் தனது நிறுவனத்தின் பணவர்த்தனை குறித்து யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

 

எனது நிறுவனங்களான ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் சார்பில் நான் ஒரு அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். பணம் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து நான் யாருக்கும் எந்தவித அதிகாரத்தையும் அளிக்கவில்லை. அவ்வாறு என் பெயரிலோ அல்லது எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.

மேலும் எனது நிறுவனங்களான ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் என்னைத் தவிர பணப் பரிவர்த்தனை செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அனைவரின் ஆதரவுக்கும் நன்றி" என யுவன் தெரிவித்துள்ளார்.