70 ஆண்டுகளாக குளிக்காமல் வாழும் அழுக்கு மனிதர்

70 ஆண்டுகளாக குளிக்காமல் வாழும் அழுக்கு மனிதர்

உலகில் யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்துவிட்டார் ஹாஜி என்னும் முதியவர். இவருக்கு 87 வயது ஆகிறது. 67 ஆண்டுகளாக குளிக்காமலே வாழ்ந்து வருகிறார் இந்த மனிதர். தினமும் குளிப்பதை முக்கிய வேலையாக வைத்திருக்கும் பலருக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

இவர் ஈரானில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள தேஜ்கா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் விவிலியத்தில் வரும் மோசேவை போல இருப்பதாக பலர் கூறுகின்றனர்.

உலகின் மிகவும் அழுக்கான நபர் என ஹாஜி அழைக்கப்படுகிறார். அவரை பார்க்கும் போது அவரது உடல் சாம்பல் மற்றும் அழுக்குகளால் மூடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 70 ஆண்டுகளாக அவர் குளிக்கவில்லை. அவர் குளித்தால் அதனால் அவருக்கு நோய் ஏற்படும் என அவர் நம்புகிறார் எனவே தான் அவர் குளிப்பதே இல்லை.

இதில் இன்னும் அசாதரணமான விஷயம் என்னவென்றால் அவரது உணவுகள் தான். அவர் இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சிகளைத்தான் உணவாக உண்கிறார். அதில் அதிகமாக முள்ளம்பன்றிகளை உண்கிறார்.

மேலும் அவர் புகைப் பழக்கத்தையும் விரும்புபவராக இருக்கிறார். ஆனால் அவர் புகைப்பதற்கு புகையிலையை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக தனது துருப்பிடித்த புகைக்கும் குழாயில் விலங்குகளின் மலத்தை இட்டு புகைக்கிறார்.

தெஹ்ரான் டைம்ஸ் என்ற பத்திரிகையின் கருத்துப்படி ஹாஜி தனது இளமை பருவத்தில் வாழ்க்கையில் சில உணர்ச்சிகரமான விஷயங்களில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதன் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட அவர் இப்படியான ஒரு வாழ்க்கையை வாழ தொடங்கினார் எனத் தெரிவித்துள்ளது.