
திடீரென வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் - பிரித்தானியாவில் பரபரப்பு
பிரித்தானியாவின் Crawley பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் 700 பேர் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 12.21 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக Sussex பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Crawleyஇல் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிந்த பின் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எரிவாயு கசிவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
West Sussex தீயணைப்பு, மீட்புச் சேவை மற்றும் தென்கிழக்கு கடற்கரை நோயாளர் வண்டிச் சேவை ஆகியவை உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
West Sussex கவுண்டி கவுன்சில், Crawley பகுதி கவுன்சில் மற்றும் Southern Gas ஆகியவையும் பிரச்சினையை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தீர்ப்பதற்கு ஆலோசித்து வருகின்றன.
அப்பகுதி பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும் வரை இருக்கும் வரை சுமார் 700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.