ஃப்ரான்ஸில் புதுவகை கொரோனா வைரசுடன் முதலாவது நபர் அடையாளம்

ஃப்ரான்ஸில் புதுவகை கொரோனா வைரசுடன் முதலாவது நபர் அடையாளம்

ஃப்ரான்ஸில் புதுவகை கொரோனா வைரசுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி லண்டனில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கு புதுவகை வைரஸ் தொற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக அந்த நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாதநிலையில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மிகவும் வேகமாக பரவக்கூடிய புதுவகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து பல நாடுகள் பிரித்தானியாவிற்கான பயணத்தடையை வித்தன.

ஃப்ரான்சும் ஆரம்பத்தில் பயணத்தடையை விதித்திருந்த போதும், சில கட்டுப்பாடுகளுடன் கடந்த புதன்கிழமை அந்த தடையை தளர்த்தியமை குறிப்பிடத்தக்கது.