இலங்கையில் கொரோனாவுக்கு பலியான மற்றுமொரு பச்சிளம் குழந்தை

இலங்கையில் கொரோனாவுக்கு பலியான மற்றுமொரு பச்சிளம் குழந்தை

பிறந்து 46 நாட்களேயான பச்சிளம் குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் நியூமோனியா காரணமாக இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இந்த குழந்தையின் உடல் இன்று மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்னதாக கடந்த 8ஆம் திகதி 20 நாளான குழந்தை ஒன்று இதே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.