பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839ஆக உயர்வு

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839ஆக அதிகரித்துள்ளது.அதன்படி, புதிதாக 3 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1749ஆக காணப்படுவதோடு, 11 பேர் குறித்த தொற்று காரணமாக மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.