
கொம்பனித் தெருவில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் நேற்றைய தினம் பதிவான 458 கொவிட்-19 நோயாளர்களில், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
259 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் கொம்பனித் தெருவில் சேர்ந்த 90 பேர் அடங்குவதாகவும் குறித்த செயற்பாட்டு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.