
நிலத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக இழப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும்...!
நீர்பாசனம் தொடர்பான வேலைத்திட்டங்களுக்காக நிலங்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே அதற்கான இழப்பீட்டு நிவாரணத்தை வழங்க வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, பொது மக்களின் வரவேற்பினையும் அவர்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் இதன் போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.