
அச்சுறுத்தலற்ற பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்...!
கொவிட் 19 பாதிப்பான பகுதிகள் தவிர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய பிரதேசங்களை அடுத்த வாரமளவில் விடுவிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் விடுவிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான காரணிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தாதார்
தனிமைப்படுத்தல் சட்டம் நாட்டில் எங்கும் அமுலாக்கப்படவில்லை.
தற்போது கம்பஹாவில் 7 காவற்துறை பிரிவுகளும், கொழும்பு மாவட்டத்தில் 17 காவற்துறை பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசணைக்கு அமைவாக காவற்துறை பிரிவு முழுவதும் தனிமைப்டுத்துவதா அல்லது அதன் சில பகுதிகளை மாத்திரம் தனிமைப்படுத்துவதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றன.
இதன்படி, மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளை அடுத்த வாரத்தில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.