இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம்
இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது ஜனாதிபதியின் 'செழிப்பான பார்வை' கொள்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, இந்நிகழ்வின் ஆரம்ப வைபவம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.