நான்கு பிள்ளைகளின் தாயாரை காவுகொண்ட மின்சாரவேலி!

நான்கு பிள்ளைகளின் தாயாரை காவுகொண்ட மின்சாரவேலி!

அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின்சாரவேலியில் சிக்கி தாய் ஒருவர் பரிதாபமான முறையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காளி கிட்னம்மாள் (65வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த தாய் பூஜைக்காக வாழையிலை வெட்டுவதற்காக குறித்த தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் வராததால் வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது குறித்த தாய் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

அதனை தொடந்து பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த தாயின் சடலம் நுவரெலியா நீதவானின் மேற்பார்வையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.