வெளிநாடுகளிலிருந்து 30 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை..!!
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 30 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
அதில் 18 பேர் கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இலங்கையர்கள் 11 பேர் இந்தியாவிலிருந்து இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், அபுதாபியிலிருந்து ஒருவரும் நாடு திரும்பியுள்ளதாக கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரையும் சுயதனிமைக்கு உட்படுத்தியுள்ளதாக அம் மையம் குறிப்பிட்டுள்ளது.