
வைத்திய கட்டளைச்சட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதம்...!
நாடாளுமன்ற அமர்வு இன்று 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை காரணமாக 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்படவுள்ள இரண்டு வைத்திய கட்டளை சட்டங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சேவைக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தவிர்ந்த ஏனையோருக்கு இன்று நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
அத்துடன் ஊடகவியலாளர்களுக்கும் இன்று நாடாளுமன்ற அனுமதி வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.