எல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில்...!

எல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில்...!

புசல்லாவை – எல்பட தோட்டப்பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையினை மீள இயக்குமாறு கோரி தொழிலாளர்கள் நான்காவது நாளாக இன்றும் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

ஒரு மாதத்திற்குள் மீள திறக்கப்படும் என தெரிவித்து, கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி இந்த தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டது.

எனினும் இதுவரையில் அதனை மீள இயக்குவதற்கு தோட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில் தங்களது கோரிக்கைக்கான தீர்வினை பெற்றுத்தரும் வரையில் தாங்கள் தொழிலுக்கு செல்லப்போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, இராஜாங்க அமைச்சர் ஜீவன்; தொண்டமானை தொடர்பு கொண்டு வினவிய போது, இந்த பிரச்சினைக்கான தீர்வு எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.