
வருமானம் இழந்தோருக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கும் செயற்திட்டம் நாளை ஆரம்பம்
கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முதற்கட்டமாக நாளைய தினம் மினுவாங்கொடை - திவுவலபிட்டி, அத்தனகல்ல மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 72 ஆயிரத்து 345 பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணி கொவிட்-19 தொற்று காரணமாக கம்பஹா மாவட்டத்தின் 19 காலற்துறை அதிகார பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது
இதன்காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.