திருக்கோணமலை - வட்டவான் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது

திருக்கோணமலை - வட்டவான் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது

திருக்கோணமலை - வட்டவான் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தோப்பூர், காலி,அத்துருகிரிய, நிலாவெளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.