மிருகக்காட்சிசாலைகள் அனைத்திற்கும் மீள் அறிவித்தல் வரை பூட்டு

மிருகக்காட்சிசாலைகள் அனைத்திற்கும் மீள் அறிவித்தல் வரை பூட்டு

தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேசிய பூங்காக்களுக்கு வருகைத் தருவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.