மாதகல் கடற்பரப்பில் மீட்கப்பட்ட மர்மப்பொதிகள்!
யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த மர்மப்பொதிகள் கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மாதகல் கடல் பகுதியில் மர்ம பொதிகள் மிதந்து வருவதை அவதானித்துள்ளனர்.
அவ்வாறு மிதந்து வந்த மர்ம பொருட்களை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் இருந்து 116 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சாவினை கடற் படையினர் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட பொதிகள் 116 கிலோ எடையுடைய கேரள கஞ்சா என்று காங்கேசன் துறை பொலிசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.