ரியாஜ் பதியுதீன் விடுதலை- சட்டமா அதிபர் விடுத்துள்ள அழைப்பு

ரியாஜ் பதியுதீன் விடுதலை- சட்டமா அதிபர் விடுத்துள்ள அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் பிரதான விசாரணை அதிகாரிகளை சட்டமா அதிபர் தமது அலுவலகத்தில் வைத்து சந்திக்கவுள்ளார்.

இதன்போது, சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைக் கோப்புகளும் இதன்போது சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளாக சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

சட்ட மாஅதிபரின் உரிய ஆலோசனையைப் பெறாமல் CIDயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்தமை தொடர்பில் விளக்கமளிக்கும் பொருட்டே குறித்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.