சமூக விழிப்புணர்வுக்காய் துவிச்சக்கரவண்டிப் பயணம் - வைத்தியர்களின் முன்னுதாரண செயல்

சமூக விழிப்புணர்வுக்காய் துவிச்சக்கரவண்டிப் பயணம் - வைத்தியர்களின் முன்னுதாரண செயல்

கிளிநொச்சி சமூக அபிவிருத்திப் பேரவையின் ஏற்பாட்டில் சமூக விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டி பயணம் ஒன்று யாழிலிருந்து கிளிநொச்சி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியின் தலைமையில் நேற்று மாலை ஆரம்பித்த துவிச்சக்கரவண்டிப் பயணம் நேற்று வெள்ளிக் கிழமை இரவு 8 மணியளவில் கிளிநொச்சியில் நிறைவுபெற்றது.

கொரோனா பரவுகையை தடுத்தல், போதைப்பொருள் பாவனையை தடுத்தல், வீதி விபத்துக்களை தடுத்தல், சூழல் மாசுபடுவதனை தடுத்தல், உடல் ஆரோக்கியத்தை பேணல் போன்ற சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி துவிச்சக்கர வண்டிப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த துவிச்சக்கர வண்டிப் பயணம் இயக்கச்சியை வந்தடைந்த போது கிளிநொச்சி நகர றோட்டரிக் கழக உறுப்பினர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இப்பயணத்தில் இணைந்துகொண்டனர்.

இப்பயணத்தில் வைத்திய நிபுணர்களான பிரேமகிருஸ்ணா, தவராசா, எழில்வேல், சிரேஸ்ட விரிவுரையாளர் முருகானந்தன், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.