வடமராட்சி மற்றும் நெல்லியடி பிரதேச மக்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வடமராட்சி மற்றும் நெல்லியடி பிரதேச மக்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

புங்குடுதீவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்களை சுகாதாரப் பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பஸ்சில், புங்குடுதீவு பெண் உட்பட 50 பேர் பயணித்துள்ளனர். இவ்வாறு பயணம் செய்தவர்களில் கொடிகாமத்தில் 15 பேர் இறங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீதிப் பேர் துன்னாலை, நெல்லியடி, பருத்தித்துறையிலும் இறங்கியுள்ளனர். ND 9776 இவ் இலக்க பஸ்சில் பயணித்தவர்கள் 021 222 6666 என்ற மாகாண சுகாகாதர பணிமணை இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இத் தொற்றிலிருந்து அனைவரையும் காக்க உதவுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார்.