யாழ் பேருந்து நிலையத்தில் அவசரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகள்!

யாழ் பேருந்து நிலையத்தில் அவசரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகள்!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் குறித்த கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையம் ஆகிய பிரதேசங்களுக்கு தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தினூடாக பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பிரதேசங்களில் சுகாதார தரப்பினருடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் மாநகர சபையினர் இணைந்து இந்த கிருமி நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.