வர்த்தகத்தை அதிகரிக்க இந்த வாரம் ஈரான், ஈராக் எல்லைகளை திறக்க துருக்கி தீர்மானம்

வர்த்தகத்தை அதிகரிக்க இந்த வாரம் ஈரான், ஈராக் எல்லைகளை திறக்க துருக்கி தீர்மானம்

ஈரான் மற்றும் ஈராக் எல்லைகளை திறப்பதற்கு துருக்கி தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் ருஹ்சர் பெக்கன் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், துருக்கி ஈரானுடனான குர்புலாக் எல்லை மற்றும் ஈராக்கின் ஹபூர் எல்லையை இந்த வாரம் திறப்பதற்கு தீர்மானித்துள்ளது என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படுவதால் வர்த்தகத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த உதவும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஒன்றியம் தொடர்பான ஒப்பந்தமும் விரைவில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் ருஹ்சர் பெக்கன் கூறினார்.