பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய் - பாட்டி கைது!

பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய் - பாட்டி கைது!

யாழ்ப்பாணம் தென்மராட்சி - மட்டுவில் பகுதியில் தனது பச்சிளம் சிசுவை உயிருடன் புதைக்க முயன்ற 18 வயதான பெண் உள்ளிட்ட இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த இளம் பெண்ணுக்குப் பிறந்ததாகக் கருதப்படும் பச்சிளம் சிசுவை, அவர் தனது தாயுடன் இணைந்து  உயிருடன் புதைக்க முற்பட்டுள்ளார்.

அதன்போது, சிசு அழுததால், சம்பவ இடத்திற்கு சென்ற அயலவர்களால் சிசு காப்பாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

காப்பாற்றப்பட்ட சிசு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.