கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை

கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.