ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த மேலும் 5 பெண்களிடம் வாக்குமூலம்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த மேலும் 5 பெண்களிடம் வாக்குமூலம்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 பெண்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் குறித்த வீட்டில் 11 பெண்கள் வேலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களில் 5 பேரிடம் நேற்று (28) வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.