அலாஸ்காவில் மிகப்பெரும் சுனாமி: 524 மீட்டர் உயரம் (10-7-1958)

அலாஸ்காவில் மிகப்பெரும் சுனாமி: 524 மீட்டர் உயரம் (10-7-1958)

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. அப்போது கடல் அலை 524 மீட்டர் உயரத்திற்கு எழும்பி அச்சுறுத்தியது. இந்த சுனாமிதான் உலகிலேயே மிக்பெரிய சுனாமி ஆகும். கடல் அருகே அதிக மக்கள் வசிக்காததால் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்தனர். மேலும் இதே தேதியில் முக்கிய சம்பவங்கள்:- * 1909 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்காக விடப்பட்டது. * 1925 - சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.

 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. அப்போது கடல் அலை 524 மீட்டர் உயரத்திற்கு எழும்பி அச்சுறுத்தியது. இந்த சுனாமிதான் உலகிலேயே மிக்பெரிய சுனாமி ஆகும்.

கடல் அருகே அதிக மக்கள் வசிக்காததால் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

 


மேலும் இதே தேதியில் முக்கிய சம்பவங்கள்:-

* 1909 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்காக விடப்பட்டது.

* 1925 - சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.

* 1925 - இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1951 - கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

* 1956 - இலங்கை, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

* 1962 - உலகின் முதல் தொலைத்தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.

* 1973 - வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

* 1973 - பஹாமாஸ் பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.

* 1978 - மௌரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.

* 1991 - யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.

* 1992 - போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.

* 2006 - இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.