கேப்பாபுலவில் 5 வயது மகளை சரமாரியாக வெட்டிய தந்தை

கேப்பாபுலவில் 5 வயது மகளை சரமாரியாக வெட்டிய தந்தை

தனது ஐந்தே வயதான மகளை கத்தியால் வெட்டிய இளம் குடும்பஸ்தரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் இன்றையதினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றை அடுத்து கோபமடைந்த தந்தை தனது 5 அகவை சிறுமியை சராமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 அகவையுடைய நபரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.