இந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 75,829 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 75,829 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 75 ஆயிரத்து 829 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக இந்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அத்துடன் 940 பேர் நேற்றைய தினம் கொவிட் 19 காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரையில் இந்தியாவில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 65 இலட்சத்து 49 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 782 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.