இன்றைய போட்டியின் மூலம் அரிய சாதனை படைக்கிறார் எம்எஸ் டோனி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடுவதன் மூலம் ஐபிஎல்-லில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை எம்எஸ் டோனி படைக்க இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை அணி ஏறக்குறைய எல்லாத் தொடர்களிலும் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியிருக்கும். மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு அதிக முறை முன்னேறியதன் மூலம் சென்னை அணி மற்ற அணிகளை விட அதிக போட்டிகளில் விளையாடியிருக்கும்.

2008-ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் டோனி விளையாடி வருகிறார். இவருடன் இணைந்து ரெய்னாவும் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இருந்து சொந்த வேலை காரணமாக சுரேஷ் ரெய்னா வெளியேறியுள்ளார்.

 

சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் 192 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுதன் ஐபிஎல்-லில் ஒரு வீரர்கள் விளையாடிய அதிகப்பட்ச போட்டியாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது போட்டியில் விளையாடியபோது கேப்டன் எம்எஸ் டோனி 192 போட்டிகளில் விளையாடி சமன் செய்திருந்தார்.

இன்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டம் மூலம் 193 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.