தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 252 பேர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 252 பேர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தி மேலும் 252 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர். பூனானி மற்றும் பெல்வெஹெர ஆகிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த குழுவினரே இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசங்க தெரிவித்தார்.  முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 43 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 4,387 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.