சத்தமில்லாமல் சாதிக்கும் தமிழன் -ஒருவருடத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி

சத்தமில்லாமல் சாதிக்கும் தமிழன் -ஒருவருடத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான அல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 79சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை கடந்த 2004-ஆம் ஆண்டு சேர்ந்தார். பின்பு 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சி இ ஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு வருடத்தில் இவரின் சொத்து மதிப்பு 79 சதவீதம் உயர்ந்து 5,900கோடி ரூபாவை எட்டியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள ஹூரன் ரிச் லிஸ்ட் -ல் குறிப்பிடப்பட்டது என்னவென்றால்,பணக்கார இந்தியத் தலைவர்கள் பட்டியலில் (Top 10 Richest Indian Professional Managers list) கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சுந்தர் பிச்சையைப் போல் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்லாவின் சொத்து மதிப்பு 5,900கோடி ரூபாய் என்பதால் பணக்கார இந்திய தலைவர்கள் பட்டியலில் இருவரும் 5வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.

எனினும் சத்ய நாடெல்லாவின் சொத்து மதிப்பு இந்த வருடம் வெறும் 16சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.