இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஜகத் சமந்தவிற்கு பிணை

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஜகத் சமந்தவிற்கு பிணை

ஆனைவிழுந்தான் ஈரவலய காடழிப்பு தொடர்பான கைதான பிரதான சந்தேகநபரான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஜகத் சமந்தவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவர் 10 லட்சம் ரூபா வீதம் தலா இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளனர்.

ஆணைவிழுந்தான் ஈரவலய காடுகள் பெக்கோ இயந்திரத்தை கொண்டு அண்மையில் அழிக்கப்பட்டிருந்தன.