
புகையிரதத்துடன் மோதிய பாடசாலை வான்! தெய்வாதீனமாக தப்பிய மாணவர்கள்
கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை வான் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் கொழும்பு - சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
எவ்வாறாயினும் சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வானில் பயணித்த 17 மாணவர்களும் அதன் சாரதியும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.