மன்னார்-நானாட்டான் பிரதேசத்திலிருந்து பாண்டியர் கால நாணயங்கள் கண்டெடுப்பு

மன்னார்-நானாட்டான் பிரதேசத்திலிருந்து பாண்டியர் கால நாணயங்கள் கண்டெடுப்பு

மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன.

இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, காணி உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு சென்ற நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர், அந்த நாணயங்களை முருங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

தற்போது அந்த நாணயக்குற்றிகள் அனைத்தும் மன்னார் நீதிமன்றின் ஊடாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பண்டைய நாணயங்கள் கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை நாணயம் என்று நம்பப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.