மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

ஸ்ரீலங்காவில் உள்ள தேசிய பாடசாலைகளில் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது மீள் அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.