சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வடமாகாண கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா இன்று நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளார்.
வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதலளித்த போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026