பிரித்தானியாவில் பாரிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவில் பாரிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவில் பொலிஸார் கண்டுபிடித்தபாரிய பதுங்குழியால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

பிரித்தானியாவின் Skendleby என்ற கிராமத்தில் பண்ணை ஒன்றை சோதனையிட்ட பொலிசார், வைக்கோல் சேமித்து வைக்கும் இடத்தில் ரகசிய வழி இருப்பதைக் கண்டுபிடித்து அந்த வாயில் வழியாக இறங்கியதில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு பூமிக்கடியில் 12 கொண்டெய்னர்களை இணைத்து பிரமாண்ட பதுங்கு குழி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு, ஏராளம் கஞ்சாவும், 22 குதிரைகள் மற்றும் ஒரு இலாமா என்னும் விலங்கும், ஆறு கார்கள் மற்றும் ஆயுதங்களும் மறைத்து வைக்கப்படிருந்தன. அந்த அளவுக்கு அந்த பதுங்கு குழி பாரிய அளவாக இருந்தது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 580,000 பவுண்டுகளாகும். இந்த சம்பவம் தொடர்பாக 34, 35 மற்றும் 28 வயதுடைய மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.