காணொளி ஊடாக இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான ஏலம்

காணொளி ஊடாக இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான ஏலம்

ஸ்ரீ லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் ஒக்டோபர் முதலாம் திகதி காணொளி ஊடாக நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டே ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த ஏலத்திற்காக 420 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்திருந்தாலும், 150 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே களமிறக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த குழாமில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிஸ் கெய்ல், டுவைன் பிராவோ, டெரன் சமி உள்ளிட்ட பிரபல வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.