கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு 10 மணிமுதல் நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு 10 மணிமுதல் நீர்வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பாகங்களில் இன்றிரவு 10 மணிமுதல் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில், இன்றிரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரையில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.