பாகிஸ்தானில் 3 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் மேலும் 516 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இஸ்லாமாபாத்:

 

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 17-வது இடத்தில் உள்ளது.

 

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

பாகிஸ்தானில் மேலும் 516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,00,371 ஆக உயர்ந்துள்ளது.

 

ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,370 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.