வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மின்னேரிய இராணுவ முகாமில் வவுனியாவை சேர்ந்த 7 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் .
மின்னேரியா இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் உட்பட வவுனியாவை சேர்ந்த 7 பேர் கொவிட் 19 கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் .
அவர்கள் இன்றைய தினம் அவர்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தின் ஊடாக தமது வதிவிடங்களை உறுதிப்படுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.