லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த வீரர்கள்..!
லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக சுமார் 350 வெளிநாட்டு வீரர்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் 5 அணிகள் விளையாடவுள்ள குறித்த கிரிக்கட் தொடரில் ஒரு அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
எனவே லங்கா பிரிமியர் லீக் போட்டிக்கான வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் எல்.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக விரும்பும் தெரிவித்துள்ள வீரர்களில் கிரிஸ் கேய்ல், தினேஸ் ரம்டீன், லுக் ரைட், சொஹிப் மலிக் மற்றும் சஹிட் அப்ரிடி ஆகியோர் அடங்கியுள்ளனர்.
எல்.பி.எல் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
23 போட்டிகள் அடங்கியுள்ள எல்.பி.எல் தொடருக்கு கொவிட் 19 தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுடன் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர் ரவீன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.